இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டிவியில் ஒரு காலத்தில் சீனியர் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியின் பல 'காப்பி' வடிங்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாக மாறியுள்ளன. சீனியர் ஹீரோயின்களான குஷ்பு, கீதா, ரோஜா, ஊர்வசி போன்றவர்கள் அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன் சில பெயர்களில் தமிழில் வந்த நிகழ்ச்சிகள் தற்போது 'சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள்', என பிரபல தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. ஏழை மக்களின் குடும்பப் பிரச்சனைகளை மட்டுமே அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்றும் அதற்கென்று கோர்ட், நீதிபதி ஆகியோர் இருக்கும் போது தொலைக்காட்சிகள் எப்படி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கிண்டலடித்து வைக்கப்பட்ட எழுந்த காட்சியால், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் அவரையே டிவிட்டரை விட்டு ஓட வைத்துவிட்டார்கள். அவர் இப்போது யாரிடம் போய் நியாயம் கேட்பார் என்பது தெரியவில்லை.
இதனிடையே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ள சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
“கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை என்றால் அவற்றைத் தீர்த்து வைக்க குடும்ப நீதிமன்றங்கள் இருக்கின்றன. கிரிமினல் பிரச்சனை என்றால் சட்டத்தின் பல பிரிவுகள் இருக்கின்றன. நாம், நடிகர், நடிகைகள் டிவி நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து கொண்டு அடுத்தவர்களின் பிரச்சனைகளையும், வலிகளையும் பற்றி தீர்வு சொல்வதைப் பார்க்கும் போது களைத்துப் போகிறது. நாம் இதை நிறுத்தி விடலாமா... நாம் கற்றுக் கொண்ட கையளவு விஷயங்களை வைத்து கலைகள் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் தீர்வு சொல்வோமே...அப்படியே தீர்வு சொல்ல இது சரியான மேடை என நினைத்தால் கேமிரா இல்லாமல் சொல்லலாமே. நல்ல வக்கீலிடமோ, கவுன்சிலிங் செய்பவர்களிடமோ அவர்களை அழைத்துச் செல்லாமோ,” எனக் கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எதற்காக என அந்தக் கால 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சி உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான டிவி மீடியாவில் அனுபவம் வாய்ந்த சந்திரா பாரதியிடம் இது பற்றி கேட்ட போது, “இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் 'இது கோர்ட்டுமல்ல, இங்கு சொல்லப்படுவது தீர்ப்புமல்ல. சக மனிதர்களுக்கு தங்களுடைய பிரச்சனைகளைப் பற்றி சொல்லி, அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாக' மட்டுமே நடத்த வேண்டும். சட்டத்தின் வழியில் குறுக்கிடுவதோ, தீர்ப்பு சொல்வதே இந்த நிகழ்ச்சிகளுக்கான நோக்கமில்லை. மற்றவர்கள் வாழ்க்கையில என்ன மாதிரி பிரச்சனை இருக்கு, அப்படி ஒரு பிரச்சனை நம்ம வாழ்க்கையில வந்தால் நாம எப்படி சமாளிச்சிக்கணும் என்பதை மத்தவங்களும் தெரிஞ்சிக்கணும்கறதுக்காக நடத்தப்படற நிகழ்ச்சியாதான் இருக்கணும். இதைதான் சட்டத் தீர்வு மாதிரி எடுத்துக்கக் கூடாது. சில சமயங்களில் வரம்பு மீறல் நடக்கிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பப் பிரச்சனைகளையும் தாண்டி, பொதுப் பிரச்சனைகள், மருத்துவம் சம்பந்தமான பிரச்சனைகள், சமூகப் புறக்கணிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருக்கு. அது மூலமா மக்கள் கிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தெலுங்குல இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வரம்பு மீறி நடக்குது, அதுக்கு தொலைக்காட்சிகளும் ஒரு காரணம். ஆனால், தமிழ்த் தொலைக்காட்சிகள் கிட்ட முதிர்வான அணுகுமுறை இருக்கு. நம்ம ரசிகர்களையும் அவ்வளவு சுலபமா ஏமாத்திட முடியாது. அவங்க யாரு இதைப் பத்தியெல்லாம் தீர்ப்பு சொல்லன்னு கேள்வி எழுப்புவாங்க.
சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளுடன் நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அவர்களுடன் ஒருவராக தங்களது அணுகுமுறையைக் கடைபிடித்தால் இந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடமும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கும்,” என்கிறார்.