வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
மலையாள நடிகை சுனு லட்சுமி. தமிழில், சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், டூரிங் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிக்கும் அறம் படத்தில் நடித்து வருகிறார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு குழந்தையை மாவட்ட கலெக்டர் காப்பாற்றுகிற கதை. இதில் கலெக்டராக நயன்தாரா நடிக்கிறார். 4வயது குழந்தையின் தாயாக சுனுலட்சுமி நடிக்கிறார்.
"ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது 4 வயது குழந்தையின் அம்மாவாக நடிக்காதே என்று சிலர் சொன்னார்கள். ஆனால் அந்த கதை அற்புதமானது. குழந்தை பிழைக்குமா, பிழைக்காதா என்ற பரிதவிக்கிற தாயின் கேரக்டர். நடிப்பதற்கு 100 சதவிகிதம் ஸ்கோப் உள்ள படம். அதனால் தைரியமாக ஒப்புக்கொண்டேன். நயன்தாராவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், கேரக்டராக வாழ்வது, டெக்னீஷியன்களுக்கு மரியாதை தருவது, சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது என பல விஷயங்களை நயன்தாராவிடம் கற்றுக் கொண்டேன்" என்கிறார் சுனுலட்சுமி. அறம் தவிர சாவி, தாராவி படங்களிலும் நடித்து வருகிறார் சுனுலட்சுமி. அறம் படம் தனக்கு திருப்பம் தரும் என்றும் நம்புகிறார்.