மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக பல குறும்படங்களை தயாரித்தார்கள். அதில் ஒன்று என் அன்புக்குரியவளே. இந்த குறும்படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. கல்லூரி போட்டிகளில் பரிசு வென்றது. இதனால் இதனை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார்கள்.
குறும்படத்தை இயக்கிய சிவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கினார். படத்திற்கு காதல் கண்கட்டுதே என்ற பெயர் வைக்கப்பட்டது. குறும்படத்தில் நடித்த கே.ஜி, அதுல்யா ஆகியோர் இதிலும் ஹீரோ, ஹீரோயினாக நடித்தார்கள். பவன் இசை அமைத்தார். பி.தேவா தயாரித்தார்.
"என் அன்புக்குரியவளே குறும்படத்தை பார்த்த எல்லோருமே இதை திரைப்படமாக எடுங்கள் என்று கூறினார்கள். அதனால் தயாரிப்பில் இறங்கினோம். குறும்படத்தில் காதல் மட்டும் இருந்தது. அதோடு காமெடி, சண்டை, பாடல்கள் சேர்த்து திரைப்படமாக்கினோம். கோவை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். எதிர் எதிர் குணாதிசயங்கள் கொண்ட காதலர்களின் மோதலும், கூடலும்தான் கதை. இன்றைய இளையஞர்களின் காதலை யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் சிவராஜ்.