பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தன்ஷிகா நடித்துள்ள ராணி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கி உள்ளார். முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ளார். விழாவில் இயக்குனர்கள் சமுத்திரகனி, பேரரசு, நடிகர் மனோஜ் குமார், நமோ நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசியதாவது:
நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால் தான். இப்போது முதன் முறையாக இசை ஞானி இளையராஜாவிடம் கோரிக்கை வைக்க போகிறேன். அவர், யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும்.
ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம் அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி. எனக்கு கார்த்திக் ராஜவிடமும் , யுவன் ஷங்கர் ராஜாவிடமும் ஒரு கோரிக்கை உண்டு. இசைஞானி இளையராஜா இது வரை இசையமைத்த படங்களின் லிஸ்டை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்த திரையுலகையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான்.
இசைஞானிக்கு பாராட்டு விழா ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். என்றார் இயக்குநர் கரு,பழனியப்பன்.