'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மைனா படத்திற்கு பிறகு முன்னணி நடிகரானவர் தம்பி ராமைய்யா. அதுவரை இயக்குனர் என்கிற ட்ராக்கிலும் சென்று கொண்டிருந்தவர், பின்னர் முழுநேர நடிகராகி விட்டார். காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர், சில படங்களில் கதையின் நாயகன் போன்றும் நடித்து வருகிறார். அந்த வகையில், வருடத்துக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து வரும் பிசியான நடிகராக இருக்கிறார் தம்பி ராமைய்யா.
இந்நிலையில், தம்பி ராமைய்யாவின் மார்க்கெட் கருதி அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்கும் சில இளவட்ட டைரக்டர்கள், காட்சிகளில் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று தங்கள்தரப்பில் அவரிடம் சொன்னாலும், அவர் அதை பொருட்படுத்துவதில்லையாம். தனது விருப்பத்துக்கே நடிப்பதாக சொல்கிறார்கள். இதனால் தாங்கள் எதிர்பார்த்தபடி அவர் காட்சிகள் வரவில்லை என்று பீல் பண்ணுகிறார்கள்.
ஆனால், இளவட்ட டைரக்டர்களின் படங்களில் ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்து விட்டு தனது விருப்பத்துக்கு நடிக்கும் தம்பி ராமைய்யா, பிரபுசாலமன், பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் என்கிறபோது, அவர்கள் எப்படி நடிக் கச்சொல்கிறார்களோ அப்படித்தான் நடிக்கிறாராம். முன்னணி டைரக்டர்களின் படங்களில் அவர் தனது இஷ்டத்துக்கு நடிப்பதில்லையாம். இதனால் இதுவரை தம்பி ராமைய்யாவை ஆர்வமாக புக் பண்ணிய புதுமுக டைரக்டர்கள் இப்போது அவரது நெருங்க அச்சப்படுகின்றனர்.