அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் கூட்டம் இன்று பிற்பகல் துவங்கி நடந்து வருகிறது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் சிலர் தங்களையும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொதுக் குழு கூட்டம் நடக்கும் இடத்திற்குள் சென்றனர்.
பொதுக் குழு கூட்டம் நடந்த இடத்திற்குள் செய்தியாளர்களோ, போலீசாரோ அனுமதிக்கப்படவில்லை. முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும், தற்போதைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அடிதடி சம்பவங்களும் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மோதலை தடுக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த மோதலை அடுத்து பொதுக் குழு கூட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்த மோதலில் நடிகர் கர்ணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மோதலை அடுத்து பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடக்க இருந்த பொதுக்குழு கூட்டம் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் மிரட்டல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனாலேயே நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்திலேயே பொதுக்குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தின் கதவுகள் முற்றிலுமாக மூடப்பட்டு, கூட்டம் நடந்து வருகிறது. கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே இருப்போரை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.dinamalar.com/video_main.asp?news_id=218&cat=live