அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நடிகர் திலீப்-காவ்யா மாதவன் இருவரின் திருமணம் அவர்களது ரசிகர்களுக்கு சந்தோசம் அளித்தாலும், கலாச்சார காவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பலராலும் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது. மஞ்சு வாரியாருக்கு ஆதரவு அளிக்கிறேன் என ஒரு சிலர் திலீப்பையும் காவ்யா மாதவனையும் வசைபாட, அதன் ஒரு பகுதியாகத்தான் கேரளா முன்னாள் அமைச்சர் பந்தளம் சுதாகரன் என்பவர், இவர்கள் திருமணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அருவெறுக்கத்தக்க வகையில் கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர்களது திருமணம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட்ட பந்தளம் சுதாகரன், “இனி பிரச்சனை இல்லை.. கறுப்பு பணம் நல்ல நோட்டுக்களாக மாறிவிட்டன” என குறிப்பிட்டுள்ளார்.. அதாவது திலீப்பும் காவ்யா மாதவனும் ஏற்கனவே அவரவர் வாழ்கை துணையுடன் விவாகரத்து பெற்றுக்கொண்டபின் நட்பாக இருந்துவந்ததைத்தான் அவர் கறுப்பு பணம் என கொச்சைப்படுத்தியுள்ளார்.. இதுகுறித்து அவருக்கு ஏராளமான கண்டனங்கள் வரவே, வேறுவழியின்றி தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த பதிவை நீக்கிவிட்டார் பந்தளம் சுதாகரன்.