மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
காஷ்மோரா படத்திற்கு பிறகு டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் டோரா என்கிற ஹாரர் படத்தில் நடித்து முடித்து விட்டார். ஏற்கனவே அவர் நடித்த மாயா படம் போன்று இன்னொரு வித்தியாசமான பேய் கதையில் அப்படம் உருவாகியிருக்கிறது. அதையடுத்து அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருபவர், அறம் என்ற படத்திலும் லீடு ரோலில் நடித்து வருகிறார். கோபி நயினார் இயக்கும் இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார் நயன்தாரா.
தண்ணீர் வசதி இல்லாமல் வறட்சியில் இருக்கும் கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் ஒரு அதிரடியான கலெக்டர் வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா, நடித்த பெரும்பாலான காட்சிகள் பரமக்குடியில் நடைபெற்று வந்தது. இன்னும் 10 நாட்களே பேலன்ஸ் உள்ள நிலையில், இன்று முதல் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் ஈசிஆர் சாலையில் பத்து நாட்கள் நடைபெற உள்ளது. அதோடு படப்பிடிப்பு முடிந்து விடுமாம். மேலும், ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த அறம் படம் முழுக்க கலெக்டர் கெட்டப்பிலேயே நயன்தாரா நடித்திருப்பதால், அனைத்து காட்சிகளிலும்
ஒரேமாதிரியான காஸ்டியூமையே அணிந்து நடித்துள்ளார்.