ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் இருந்து தி.நகர், நடிகர் சங்க வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த மிரட்டல் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நாளை நவம்பர் 27ஆம் தேதி ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும், பொதுக்குழு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைகளும் மும்முரமாய் நடந்து வந்தது.
கல்லூரிக்கு மிரட்டல் : இந்நிலையில் ஏற்கனவே நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை கல்லூரியில் நடத்த கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சரத்குமார், ராதாரவி ஆகியோர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இதனிடையே, நடிகர் சங்க பொதுக்குழுவை அனுமதிக்க கூடாது என்று லயோலா கல்லூரிக்கு போன் மூலம் தொடர்ந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் நடிகர் சங்கம் மற்றும் போலீஸிடமும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்சூழலில் பாதுகாப்பு காரணமாக நடிகர் சங்க பொதுக்குழுவை கல்லூரியில் நடத்த போலீஸ் தரப்பு அனுமதிக்கவில்லை. இதற்காக வழங்கப்பட்ட அனுமதியையும் நேற்று இரவு ரத்து செய்தது.
இடமாற்றம் : இதையடுத்து நடிகர் சங்கம், சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சங்கபொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கோரியது. இதற்கு போலீஸ் தரப்பும் அனுமதி அளித்ததையடுத்து, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை, நடிகர் சங்க வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நல்லது நடக்கும் வரை ஓய மாட்டோம் : இதுகுறித்து சென்னை, நடிகர் சங்கவளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் விஷால்.... ‛‛கெட்டதிலும் ஒரு நல்லது போல் எங்களுடைய சங்க வளாகத்திலேயே நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்த உள்ளோம். பாதுகாப்பு காரணங்களுக்காக லயோலா கல்லூரியில் கூட்டத்தை நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை. நேற்று இரவு தான் அங்கு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது ரத்தானது. இந்தக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு முக்கியம், எனவே சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் நடக்கிறோம். சட்டப்படி செல்வதற்காக இங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் சங்க வளாகத்தில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சி, இந்த விழாவை எப்படி கோலாகலமாக நடத்தப்போகிறோம் என்று நீங்கள் பார்க்க போகிறீர்கள். கல்லூரிக்கு போன் செய்து சிலர் மிரட்டியதாக நாங்கள் கேள்விப்பட்டோம், நாங்கள் பயப்பட மாட்டோம். உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம், அதற்காகத்தான் நாங்கள் பதவிக்கு வந்தோம், அதை நோக்கி தான் பயணிக்கிறோம். எங்கள் வளாகத்தில் நடப்பதற்கு கடவுளுக்கும் நன்றி, அந்த மர்ம நபர்களுக்கும் நன்றி.
இவ்வாறு விஷால் கூறினார்.