ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கடந்த 2013ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்ட்' படத்தில் 'காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி.. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார். குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கும் இவரை, மலையாள நாட்டின் பொக்கிஷம் என்றுதான் கேரள ரசிகர்கள் அழைக்கிறார்கள்.. தற்போது தமிழிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தந்து பாட வைக்கிறார்கள் இசையமைப்பாளர்கள்.. நேற்று வெளியான 'பட்டதாரி' படத்தில் 'சிங்கிள் சிம்முதான் நானடா' என்கிற பாடலை எஸ்.எஸ்.குமரன் இசையில் பாடியதன் மூலம் டூயட் பாடலுக்கும் தனது குரல் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளார் விஜயலட்சுமி. இதுதவிர விக்ரம்பிரபு நடிப்பில் வெளியாக உள்ள ‛‛சொப்பண சுந்தரி...'' பாடலையும் இவர் பாடியுள்ளார்.
தற்போது விஜயலட்சுமியின் வாழ்வில் புதியதோர் வெளிச்சமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். ஆம். கேரளாவில் கோழிக்கோடு அருகில் உள்ள புதியங்காடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் விஜயலட்சுமி.. சந்தோஷும் இசைத்துறையை சேர்ந்தவர் தானாம்.. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் டிச-13ஆம் தேதி நடைபெறுகிறது.. அதை தொடர்ந்து வரும் 2017 மார்ச் 29ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.