'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விவாகரத்தும் மறுமணமும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அது பிரபலங்களுக்கு நிகழும்போது பொதுவெளிக்கு வந்து விவாதப்பொருளாகி விடுகிறது. நேற்று நடைபெற்ற பிரபல மலையாள நட்சத்திரங்களான திலீப்-காவ்யா மாதவன் திருமணமும் கூட சோஷியல் மீடியாவில் இப்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர், இந்த திருமணம் பற்றி எதுவும் வாய்திறக்காத நிலையில், திலீப் செய்தது தவறு என கூறும் பலரும் தங்களது ஆதரவை மஞ்சு வாரியருக்கு வழங்கி வருகிறார்கள்..
“கவலைப்பட வேண்டாம்.. இப்போதுதான் உங்கள் பக்கம் உள்ள நியாயம் உறுதியாகி உள்ளது, நீங்கள் தான் சரி” என சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், “திட்டமிட்டே திலீப் இதை செய்துள்ளார் என்பது இந்த திருமணத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.. நீங்க அவரை விவாகரத்து செய்தது சரியான முடிவு.. இனி நீங்கள் உங்கள லட்சியத்தை நோக்கி நகருங்கள்.. எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு” என தாமாகவே முன் வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. மஞ்சு வாரியர் இந்த திருமணம் பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை.. சொல்வாரா என்பதும் சந்தேகம் தான்.