ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த தேவயானி, ஒரு கட்டத்தில் சீரியலுக்கு சென்று விட்டார். கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடி முல்லை போன்ற சீரியல்களில் நடித்தார். அதோடு, சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி, ஜனதா கேரேஜ் போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரங்களுக்காக அவர் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சினிமா, சின்னத்திரைகளில் நிறைய கதைகளில் நடித்து விட்டேன். தொடர்ந்து நல்ல வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதனால், தேடிவரும் எல்லா படங்களையுமே நான் ஓகே சொல்வதில்லை. கதையும், கேரக்டரும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அதேப்போல் சீரியல்களில் தொடர்ந்து நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கேற்ற தொடர்களை எதிர்பார்க்கிறேன்.
மேலும், விஜய்சேதுபதி நடித்த றெக்க படத்தில் கிஷோருக்கு ஜோடியாக சிஜாரோஸ் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் என்னைதான் கேட்டார்கள். சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அது எனக்கு பிடித்தமான கேரக்டர். அந்த மாதிரி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை வரவேற் கிறேன் என்கிறார் தேவயானி.