டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் சில படங்களில் நாயகி, சில படங்களில் கேரக்டர் என கலந்து நடித்து வரும் சாந்தினி, இதுவரை கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்து வந்தவர், தற்போது திரைக்கு வந்துள்ள கண்ணுல காச காட்டப்பா என்ற படத்தில் இளசுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கிளாமராக நடித்துள்ளார்.
அவரிடத்தில், இந்த கவர்ச்சி சேவை தொடருமா? என்று கேட்டால், நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது கதாபாத்திரங்கள்தான். அந்த வகையில், கண்ணுல காச காட்டப்பா படத்தில் மலேசிய தமிழ்ப்பெண்ணாக நடித்தேன். அது மாடர்ன் கதாபாத்திரம். அந்த ரோலுக்கு ஓரளவு கிளாமராக நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அப்படி நடித்தேன். அது ரசிக்கும்படியாகவே இருந்தது. அந்த வகையில், எதிர்காலத்திலும் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கேரக்டர்கள்தான் முடிவு செயயும். ஒரு படத்தில் நடித்தேன் என்பதற்காக கதைக்கு தேவைப்படாதபோது, வலுக்கட்டாயமாக ஒருபோதும் நான் கிளாமராக நடிக்க மாட்டேன். தேவைப்படும்போதுகூட ரசிக்கும்படியான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன் என்கிறார் சாந்தினி.