அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூர் கோர்ட்டில் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கில் தனுஷை நேரில் ஆஜராகுமாறு மேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது பெற்றோர் இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலெட்சுமி. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் அவரது மனைவி மீனா ஆகியோர் மேலூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த தங்களின் மகன் கலையரசன் தங்களை பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது நாங்கள் கஷ்டத்தில் உள்ளோம். அவர் எங்களுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை கஸ்தூரி ராஜா மறுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மேலூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ், வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி செல்வகுமார் உத்தரவு பிறப்பித்தார்.