ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவராக விக்ரமன் உள்ளார். இந்த சங்கத்தில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட 3000 இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே கடந்த நான்கு வருடமாக சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர சமர்பிக்காததால் இயக்குநர்கள் சங்கத்தின் உரிமையை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உதவி இயக்குநர்கள் சிலர் சங்கத்தை தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்த முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி இயக்குநர் சங்கத்தின் தலைவர் விக்ரமனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...
‛‛அமீர் தலைவராக இருந்தபோதே கணக்கு வழக்குகளை சரியாக பதிவு செய்வதில்லை. இது சங்கத்தின் மேலாளரின் வேலை, எஙகளது வேலை கிடையாது. லேபர் கமிஷன் முறைப்படி ஏங்களுக்கு தகவல் ஏதும் அனுப்பவில்லை, நினைவூட்டலும் செய்யவில்லை. முறைப்படி வழக்கு தொடர்ந்து சங்க பெயரை திரும்ப பெறுவோம். சிலர் இயக்குநர்கள் சங்கத்தின் பெயரை பதிவு செய்து வைத்து பிரச்னை செய்வதாக மிரட்டல் விடுகின்றனர். எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.