பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவின் வசூல் சரித்திரத்தையே மாற்றி எழுதிய 'புலி முருகன்' படம் இன்று சுமார் 100 தியேட்டர்களில் 50வது நாளை கடந்துள்ளது. இந்த 50 நாட்களில் சுமார் 125 கோடி வசூலித்து, மலையாள சினிமாவின் வியாபார எல்லையை உலகளவில் விரிய வைத்திருக்கிறது இந்தப்படம்.. 56 வயதான மோகன்லால் இந்த வயதிலும் கூட இப்படியெல்லாம் அதிரடி சாகசங்கள் பண்ணுவாரா என மற்ற இளம் நடிகர்களையும், ஏன் மொத்த மலையாள திரையுலகத்தையும் வாய்பிளக்க செய்து விட்டது 'புலி முருகன்'.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் இயக்குனர் வைசாக்கை ஒரே தூக்காக தூக்கி உச்சாணி கொம்பில் உட்கார வைத்துவிட்டது.
இந்தப்படம் நூறாவது நாளை தொடும்போது, இந்தப்படம் தகர்த்தெறிந்த மற்றும் புதிதாக படைத்த சாதனைகளின் எண்ணிக்கையும் 100ஐ தொடும் என பிரமிப்பு மாறாமல் சொல்கிறார்கள் இந்தப்படத்தின் விநியோகஸ்தர்கள்.. சிறுவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்தே அவர்களது ஆசிரியர் குழு அழைத்து வந்து இந்தப்படத்தை காண்பிக்கும் நிகழ்வுகளும், ஓரிரு வயதே நிரம்பிய சுட்டிக்குழந்தைகள் கூட தங்களை 'புலி முருகன்' ஆக நினைத்துக்கொண்டு ரகளை செய்து வரும் வீடியோக்களும் பல வருடங்கள் கழித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான ஒரு 'மாஸ்' படம் என்பதைத்தான் சொல்லாமால் சொல்கின்றன.