டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல மலையாள இயக்குனர் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மணியின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இந்தி, மலையாளம் என இருமொழிப்படமாக உருவாவதாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதாலும் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வித்யாபாலன்..
இப்போதைய சூழலில் கமலா சுரையாவாக நடிக்க வித்யா பாலனை விட்டால் வேறு ஆள் இல்லைதான்.. ஆனாலும் இந்தக்கதையை உருவாக்கும்போதே இயக்குனர் கமலின் மனதில் இந்த கதாபாத்திரமாக வந்து அவ்வப்போது நிழலாடிய முகம் யார் தெரியுமா..? மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தான்.. அவரை மனதில் வைத்து தான் இந்தக்கதையை உருவாக்க ஆரம்பித்தாராம் இயக்குனர் கமல்.. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரை காலன் கொண்டுபோய்விட, இப்போது இந்த அரிய வாய்ப்பு வித்யாபாலனுக்கு கிடைத்துள்ளது.