தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தனது திருமண முறிவு பற்றி முதன் முறையாக அமலாபால் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
எனது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவு தான். இப்போதும் நான் விஜய்யை நேசிக்கிறேன். அவர் என் வாழ்வில் முக்கியமான நபர். அவரை திருமணம் செய்து கொண்டது தவறு என்று இப்போதும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்து கொண்ட வயதுதான் தவறானது. முக்கிய முடிவுகள் எடுக்கும் பக்குவம் எனக்கு அப்போது இல்லை. அறிவுரை சொல்லவும் ஆள் இல்லை.
நேரம் கடந்து செல்வதைப்போல எனது காதலும், கல்யாணமும் என்னை கடந்து சென்றுவிட்டது. விஜய்யை பிரிந்தது கடினமான முடிவுதான். நான் வருந்தி எடுத்த முடிவுதான். யாரும் பிரிவதற்காக திருமணம் செய்வதில்லை. ஆனால் பிரிவதற்கான சூழ்நிலை வரும்போது பிரியவில்லை என்றால் அதன்பிறகான வாழ்க்கை இருவருக்குமே கொடுமையாக இருக்கும். இப்போது வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறேன். யார் மீதும் எந்த வருத்தமோ, கோபமோ இல்லை. என்னை நானே இப்போது மீட்டெடுத்து வருகிறேன்.
நான் நேசிக்கிற சினிமா என்னை காப்பாற்றும். யாரையும் புண்படுத்தாமல் நம் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். என் அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்கள் திருமண வாழ்க்கை மோசமாக இருந்தால் தாமதிக்காமல் முடிவெடுங்கள் என்பதுதான். என்கிறார் அமலாபால்.