தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில் பல முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன்தான் ஜீவா என்பது அனைவருக்குமே தெரியும். ஒரு தயாரிப்பாளரின் மகனாக பரந்த மனதுடன் ஜீவா நடந்து கொண்டதற்கு அவரையே 'கவலை'ப்பட வைத்துவிட்டார் 'கவலை வேண்டாம்' படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
எல்ரெட் குமார் தயாரித்த 'கோ' படம்தான் ஜீவா நடித்த படங்களிலேயே சிறந்த வசூல் படமாக இருக்கிறது. அந்த நல்ல எண்ணத்தில் அவரை நம்பி அடுத்து 'யான்' படத்தில் நடிக்க சம்மதித்தார் ஜீவா. அந்தப் படத்தை இயக்கிய ரவி கே. சந்திரன், 'மிட் நைட் எக்ஸ்பிரஸ்' என்ற படத்தைக் காப்பியடித்து படத்தை சரியாக இயக்கவும் தெரியாமல் ஜீவாவின் மார்க்கெட்டையே காலி செய்தார்.
இருந்தாலும் அந்தப் படத்தின் தோல்வியைச் சரி செய்ய அதே தயாரிப்பாளருக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க சம்மதித்தார். அந்தப் படம்தான் 'கவலை வேண்டாம்'. படத்தின் ஆரம்பமே தகராறில்தான் ஆரம்பமானது. முதலில் அந்தப் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு போட்டோ ஷுட் கூட நடைபெற்றது. ஆனால், மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வருவது போல் இருந்ததால் படத்தை விட்டு விலகினார் கீர்த்தி சுரேஷ். அடுத்து காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் கொஞ்சம் வளர்ந்த நிலையில் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மோதல் வந்து படத்தை கைவிடும் நிலை வந்தது. ஜீவாவே தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
படம் தயாரிப்பில் இருக்கும் போதே தெலுங்கு டப்பிங்கை ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரியும், திருப்பதி பிரசாத் என்பவரும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளார்கள். அதற்குக் காரணம் காஜல் அகவர்வால். இந்தப் படத்தில் படுகிளாமராக அவர் நடித்திருக்கிறார். அவரை வைத்து தெலுங்கில் காசு பார்த்துவிடலாம் என தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நினைத்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படத்தை ஒரே நாளில் வெளியிட வேண்டும் என்பதுதான் இருவருக்குள்ளும் ஒப்பந்தம். தெலுங்குப் படத்தின் வேலைகள் முடியாததால் தமிழில் வெளியீட்டை தள்ளி வையுங்கள் என்று தெலுங்குத் தயாரிப்பாளர் கேட்டாராம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் தமிழில் நேற்று படத்தை வெளியிட்டுவிட்டார்கள். அதிலும் 'கவலை வேண்டாம்' படத்தை தமிழில் பிரமோஷன் செய்ய எந்த செலவும் செய்யவில்லை. படம் பற்றி ஜீவா உட்பட யாருமே இதுவரை பேசவில்லை.
நேற்று வெளியான படம் இரட்டை அர்த்த வசனங்களுடன் குடும்பத்துடன் பார்க்க முடியாத படமாக இருக்கிறது என்பதுதான் நேற்றைய பேச்சு. அதே சமயம் தெலுங்கில் 'கவலை வேண்டாம்' படத்தை வெளியாகாமல் போனாலும் ஜீவாவின் சூப்பர் பிளாப் படமான 'யான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ரங்கம் 2' படத்தை இன்று வெளியிடுகிறார்கள். இந்தப் படம் வெளியானால் 'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியாவது பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சினிமாவில் மட்டும்தான் நன்றி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் ?. 'நன்றி'யாக நடித்துக் கொடுத்த ஜீவாவிற்கு மிகப் பெரும் 'கவலை'யை பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள் 'கவலை வேண்டாம்' தமிழ்ப் படத் தயாரிப்பாளரும் 'ரங்கம் 2' தெலுங்குப் படத் தயாரிப்பாளரும்.