'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் டாய்லட் ஏக் பிரேம் கதா (கழிப்பறை-ஒரு காதல் கதை) என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் அக்ஷய்குமார், பும்பி பண்டேகர் நடிக்கிறார்கள். நாராயண் சிங் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதைப்படி நாயகன் மதுரா அருகே உள்ள நந்காவன் என்ற ஊரைச் சேர்ந்தவர், நாயகி பர்ஸானா என்ற ஊரைச் சேர்ந்தவர் இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் ஒரே ஆசை தான் வாழும் வீட்டில் ஒரு டாய்லட் கட்ட வேண்டும் என்பது. (ஜோக்கர் படத்தின் மைய கருவும் இதுதான்)
இதில் சிக்கல் என்னவென்றால் நிஜத்தில் இந்த இரண்டு கிராமத்தை சேர்ந்த மக்களும் பெண் கொடுப்பதில்லை, எடுப்பதில்லை. காரணம் புராணத்தின் படி கிருஷ்ணர் நந்காவன் ஊரைச் சேர்ந்தவர், மீரா பர்ஸானா கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் இரு கிராமத்தாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. "பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் இந்த நடைமுறையை உடைக்கிற மாதிரி படத்தின் கதை இருப்பதால் இந்த படத்தை வெளிவர விடமாட்டோம். இயக்குனர் நாராயண் சிங்கின் நாக்கை துண்டித்து வருவோருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுப்போம்" என்று மதுரா சாதுக்கள் அறிவித்துள்ளனர்.
மதுராவை சுற்றியுள்ள 23 கிராமங்களை சேர்ந்த மக்களும், சாதுக்களும் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுராவின் தலைமை சாது பூல் தோல் மஹராஜ் "படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் கதைப்படியான கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும். மதுராவை சுற்றி படப்பிடிப்பு நடக்ககூடாது. இல்லாவிட்டால் எங்கள் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்கிறார்.