அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
தென்னிந்திய திரைப்பட சம்மேளனத் தலைவர் ஜி.சிவா ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது நட்சத்திர கலைவிழா நடத்தியதில் பல லட்சம் ஊழல் செய்து விட்டார் என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தற்போதைய தலைவர் பி.சி.ஸ்ரீராம் போலீசில் புகார் அளித்தார். முன்னாள் தலைவர் என்.கே.விஸ்வநாதன், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரை சங்கத்திலிருந்தும் நீக்கினார்.
இதை கண்டித்து நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது பெப்சி. சென்னை நகருக்குள் நடந்த ஒரு சில படப்பிடிப்புகள் தவிர மற்ற படப்பிடிப்புகள் எதுவும் பாதிக்கவில்லை. 50 சதவிகித படப்பிடிப்புகள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் படமாகி வருகிறது. அந்த படங்களின் படப்பிடிப்பிலும் எந்த பாதிப்பும் இல்லை. பெரும்பாலான ஸ்டூடியோக்கள், ரிக்கார்டிங் தியேட்டர்களில் பணிகள் பாதிப்பின்றி நடந்தது.
"பொதுவாக வேலை நிறுத்த அறிவிப்புகள் அனைத்து சங்கங்களின் அனுமதியோடு ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தரப்பட்டு நடத்தப்படும். திடீர் வேலை நிறுத்தம் என்பது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பாதிக்கிற ஒரு விஷயத்துக்காத்தான் நடத்தப்படும். ஆனால் முதன் முறையாக யாரையும் கலந்தாலோசிக்காமல். தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினைக்காக வேலை நிறுத்தம் அறிவித்தார்கள். அதனால்தான் அதற்கு யாரும் மதிப்பளிக்கவில்லை.
ஒளிப்பதிவாளர் சங்கம் புகார் அளித்திருப்பது ஜி.சிவா ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் என்ற அடிப்படையில்தானே தவிர பெப்சி தலைவர் என்ற அடிப்படையில் இல்லை. அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் தான் குற்றவாளியில்லை என்பதை நீதிமன்றத்தின் மூலமோ அல்லது சரியான விளக்கம் அளிப்பதன் மூலமோ அவர் நிரூபிக்க வேண்டும். அதற்கும் சங்கத்திற்கும் என்ன சம்பந்தம். ஒளிப்பதிவாளர் சங்கமும் பெப்சியின் ஒரு அங்கம்தான். அப்படியென்றால் இந்த வேலை நிறுத்தம் பெப்சியை எதிர்த்து பெப்சி நடத்தியது என்றுதான் பொருள்" என்கிறார் முன்னாள் நிர்வாகி ஒருவர்.