ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சற்குணம் இயக்கிய களவாணி படத்தில் நாயகனாக நடித்தவர் விமல். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து வாகை சூடவா படத்திலும் நடித்தார் விமல். தேசிய விருது பெற்ற அந்த படம் இப்போதுவரை விமல் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்கிறது. அதையடுத்து தனுஷை வைத்து நய்யாண்டி, அதர்வா நடிப்பில் சண்டிவீரன் படங்களை இயக்கிய சற்குணம், பின்னர் மஞ்சப்பை என்ற படத்தை தயரித்தவர், இப்போது நயன்தாரா நடிப்பில் டோரா படத்தை தயாரித்து வருகிறார்.
இதையடுத்து அவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தில் நடிக்க தனுஷிடம் கால்சீட் கேட்டபோது, அவர் சில படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லி விட்டாராம். அவரைத் தொடர்ந்து அதர்வாவிடம் கேட்டாராம். அவரும் இப்போதைக்கு முடியாது என்று சொன்னதை அடுத்து, மீண்டும் விமலை வைத்தே ஒரு படத்தை இயக்குகிறாராம் சற்குணம். களவாணியில், விமலுடன் சூரியும் இணைந்தது பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனதால் இந்த புதிய படத்தில் மீண்டும் விமல்-சூரியை இணைக்க திட்டமிட்டுள்ளார் சற்குணம்.