தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவில் திரைப்படத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. திருட்டு விசிடி, திருட்டு இணையதளம் ஆகியவற்றின் மூலமாக திரைப்படத் துறை கடந்த சில வருடங்களாகவே நலிந்து வருகிறது. 'பைரசி'யிலிருந்து திரையுலகத்தைக் காப்பாற்ற சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்தந்த மாநில திரைப்படத் துறையினர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். ஆனாலும் இன்னமும் திருட்டு இணையதளங்கள் மூலமாகவும் திருட்டு விசிடி மூலமாகவும் புதிய படங்கள் உடனுக்குடன் வெளிவந்து விடுகின்றன. இதனால், தியேட்டர்கள் உட்பட திரையுலகத்தைச் சார்ந்த பல வியாபாரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு புதிய செயல்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மினி தியேட்டர்கள், மினி டிஜிட்டல் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் 21 நாட்களில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநில திரைப்படம், டெலிவிஷன், தியேட்டர்கள் வளர்ச்சிக் கழகமும், தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையும் இதற்கு ஆதரவாக செயல்பட உள்ளன.
இதன் மூலம் சுமார் 4000 சதுர அடியில் 199 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர்கள், மினி டிஜிட்டல் தியேட்டர்கள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளவும், பழைய தியேட்டர்களை இப்படி மாற்றிக் கொள்ளவும் வழி வகைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. அதற்காக சில விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டும் உள்ளன.
இதன் மூலம் தெலுங்குத் திரைப்படத் துறையின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே திரைப்படங்களை அதிகம் நேசிக்கும் மக்களாக தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்குத் திரையுலகினரிடமிருந்து மிகப் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.