இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவராக என்.கே.விஸ்வநாதனும், பொதுச் செயலாளரா ஜி.சிவாவும், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜ் இருந்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்ததில் அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
குறிப்பாக சங்கம் நடத்திய நட்சத்திர கலைவிழாவின் கணக்கில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சங்கத்திற்கு முறையாக வரி செலுத்தாததால் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெற முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சங்க நிர்வாகம் அவர்களிடம் விளக்கம் கேட்டும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜி.சிவாவும், தலைவர் என்.கே.விஸ்வநாதனும், பொருளாளர் கே.ஆர்.செல்வராஜும் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளர். ஜி.சிவா இப்போது பெப்சி தலைவராகவும், கே.ஆர்.செல்வராஜ் செயலாளராகவும் உள்ளனர். இருசங்கத்திற்கு இடையேயும் தயாரிப்பாளர் சங்கம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை ஒளிப்பதிவாளர் சங்கம் ஏற்கவில்லை.