தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரை புதிய நிர்வாகம் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது. இதனால் வருகிற 27ந் தேதி நடக்கும் சங்கத்தின் பொதுக்குழுவில் அவர்கள் கலந்து கொள்ள முடியாது.
தங்களது நீக்கத்தை எதிர்த்தும், பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரியும் சரத்குமாரும், ராதாரவியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சங்கத்தின் பொதுக்குழுவில் சரத்குமாரும், ராதராரவியும் பங்கேற்கலாம் என்று கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று அவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு நடிகர் சங்க வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை நாளை (25ந் தேதி) ஒத்தி வைத்தார்.