தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெஹெக் புரொடக்ஷன் சார்பில் பி.ரூபேஷ் மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமா சார்பில் சுப்பிரமணியம், கே.ஆர்.சீனிவாஸ் தயாரித்துள்ள படம் கன்னா பின்னா. இது அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமா இருந்து அப்படி ஒரு பெண்ணை தேடி அலையும் ஒரு இளைஞனின் காமெடி கதை. இந்தப் படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்ட இயக்குனர் தியாவை வெளியில் நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தணிக்கை குழுவை எதிர்த்து உண்ணாவிரம் இருக்க போவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் தியா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனரஞ்சகமான காமெடி படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரி இந்தப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் தான் தருவேன் என கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசினார். நியாயமான என்னுடைய எந்த கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
அதனால் எனக்கு நியாயம் கேட்டும், தணிக்கை அதிகாரியின் அராஜாக போக்கை கண்டித்தும் சாஸ்திரி பவன் முன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். இந்த உண்ணாவிரதத்துக்காக கமிஷனரிடம் அனுமதி கேட்டும், எனக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவரும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனரும் ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கத்திடம் பேசினேன்.. அவரும் இந்த உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவை தந்துள்ளார். நாளை காலை அவரது தலைமையில் தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு தியா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.