டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தினேசுடன் நடித்த அட்டகத்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் போன்ற படங்கள் நந்திதாவுக்கு கொடுத்த ஹிட்தான் அவரது கோலிவுட்டில் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அதனால் விஜய சேதுபதி, விஷ்ணு போன்ற வி எழுத்தில் பெயர்களைக்கொண்ட நடிகர்களின் படம் என்றாலே தனக்கு ராசிதான் என்று சினிமா விழாக்களில் உரக்க குரல் கொடுத்து வந்தார் நந்திதா.
ஆனால், இப்போது அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அந்த வி நடிகர்கள் யாருமே நந்திதாவை கண்டுகொள்வதில்லையாம். சமீபத்தில் மேற்படி நடிகர்களின் புதிய படங்களில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே ஒர்க்அவுட்டாகவில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களை அவர் அணுகியபோது, டைரக்டர்களை கைகாட்டி விட்டு நழுவிக்கொண்டார்களாம். இதனால் வி நடிகர்கள் தன்னை கழட்டி விட்டு விட்டதாக புலம்பும் நந்திதா, இப்போது தான் நடித்து வெளிவர தயாராகிக்கொண்டிருக்கும் உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை அபிமான ஹீரோக்களைப்போன்று இந்த படங்களும் தன்னை கைவிட்டு விட்டால், ஐதராபாத்தில் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார் நந்திதா.