'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட் சினிமாவில் பேய் சீசன் இன்னும் முடிந்தபாடில்லை. அப்படி வெளியான பெரும்பாலான படங்கள் பழிவாங்கும் கதைகளில்தான் இருந்தன. ஆனால், இறந்து போன ஒரு ஆத்மா இன்னொரு உடம்பிற்குள் புகுந்து பழிவாங்குவதாக படங்கள் வந்த நிலையில், சின்னாஸ் பழனிசாமி இயக்கத்தில் வெளியாகயிருக்கும் மியாவ் படத்தில் நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு இறந்து போன ஒரு பெண், ஒரு பூனையின் உடம்பிற்குள் சென்று தன்னை கற்பழித்து கொன்றவர்களை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது.
மேலும், பூனை மனிதனை பழிவாங்கும் காட்சிகள் நம்புவது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த காட்சிகளில் அந்த பூனையை காட்ஷில்லா போன்று காண்பிக்கிறார்களாம். அது பழிவாங்கும் காட்சிகள் கொடூரமாக படமாக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அந்த காட்சிகளைப்பார்த்த சென்சார்போர்டு அதிகாரிகள், சிறுவர்களை மிரட்டுவது போல் இந்த காட்சிகள் உள்ளன என்று ஏ சான்றிதழ் கொடுத்து விட்டார்களாம். இந்த சான்றிதழ் காரணமாக படத்தின் இமேஜ் மாறி விடும் என்பதற்காக லட்சக்கணக்கில் கிராபிக்ஸ் செய்து பூனையை காட்ஷில்லாக காண்பித்த பல காட்சிகளை அப்படக்குழு கத்தரித்துள்ளதாம்.