ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருவதால் சில வருடங்களுக்கு முன் த்ரிஷாவின் மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. இனியும் கதாநாயகியாக நடித்தால் ரசிகர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட த்ரிஷா, சினிமா பைனான்சியர் வருண்மணியனுடன் காதலாகி அவருக்கு கழுத்தை நீட்டத்தயாரானார். நிச்சயதார்த்தம் நடைபெற்று சில மாதங்களிலேயே திருமணம் ரத்து செய்யப்பட்டது.
த்ரிஷா வாழ்வில் இந்த சோகம் நடந்த பிறகு நடந்தது ஒரு ட்விஸ்ட். ஏகப்பட்ட படங்கள் வரத்தொடங்கின அவருக்கு. த்ரிஷாவுக்கு ஏற்பட்டதைப்போல் இப்போது இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்வதாக சொல்லி பிரிந்து போன பிறகு அமலா பாலுக்கு படங்கள் வரத்தொடங்கியுள்ளன.
திருமணத்துக்குப் பிறகு நடித்த 'அம்மா கணக்கு' படத்திற்குப் பின்னர் 'திருட்டு பயலே' படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கிறார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமான அமலா பால், தற்போது, தனுஷுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் லேட்டஸ்ட் படமான 'வேலையில்லா பட்டதாரி' 2ஆம் பாகத்திலும் முக்கிய வேடமொன்றில் அமலா பால் நடிக்கவிருக்கிறார். அதோடு, கன்னடத்தில் சுதீப்புக்கு ஜோடியாக 'ஹெப்புலி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது அமலா பாலின் முதல் கன்னடப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 4 படங்கள் தவிர தெலுங்கில் 2 படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். விவாகரத்துக்குப் பிறகு தங்களுடைய மகள் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதை பார்த்து அவரது பெற்றோர் பூரித்துப்போயிருக்கிறார்களாம்.