டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலமுரளி கிருஷ்ணா போன்று இனியொரு இசை மேதை பிறக்கப்போவது இல்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். கர்நாடக இசை சாம்ராஜ்யத்தின் இமயம் தொட்ட பால முரளி கிருஷ்ணா, நேற்று காலமானார். இவரது மரண செய்தி இசை உலகில், குறிப்பாக கர்நாடக சங்கீத கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலமுரளிகிருஷ்ணா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் இளையராஜா, அவரின் மறைவை கேட்டு மிகவும் வருத்தப்பட்ட இளையராஜா அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா... ‛‛அண்ணா பாலமுரளிகிருஷ்ணா மிகப் பெரிய இசை மேதை. இப்படி ஒரு இசைமேதை இனி இந்தியாவில் பிறக்கமாட்டார். அவரின் மறைவு தாங்க முடியாத பேரிழப்பு'' என்றார்.
இளையராஜா இசையில் ‛கவிக்குயில்' படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைகிறான்...'' என்ற பாடலை பாலமுரளி கிருஷ்ணா தான் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.