'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயராம் மகன் காளிதாஸ் தமிழில் முதன்முதலாக நடித்து வெளியான 'மீன்குழம்பும் மண்பானையும்' படம் மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், கூட அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்துள்ளது. அதுவே தற்போது அவர் மலையாளத்தில் நடித்துவரும் 'பூமரம்' என்கிற படத்திற்கான எதிர்பார்ப்பை கிளப்பியும் உள்ளது. என்னதான் காளிதாஸின் தந்தை ஜெயராமும் அவரது தாய் பார்வதியும் நடிகர்களாக இருந்தாலும் மகன் காளிதாஸ் சினிமாவில் நுழைய முடிவெடுத்தபோது, அவரது அம்மா பார்வதி மகனுக்கு ஒரு நிபந்தனை விதித்தார்..
அதாவது காளிதாஸ் படித்து முடித்து ஒரு டிகிரி சர்டிபிகேட்டை கையில் வாங்கிய பின்னர்தான் நடிக்கவேண்டும் என்பது.. அதன்படி லயோலா காலேஜில் டிகிரியை முடித்துவிட்டே நடிப்பில் இறங்கியிருக்கிறார் காளிதாஸ். அடிக்கடி நட்சத்திர தம்பதிகளுக்கும் விரிசல் எனும் செய்திகளை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, ஜெயராம்-பார்வதி இருவரின் சந்தோஷமான குடும்ப வாழ்க்கை ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையுமே தரும்.. “எங்க அப்பா, அம்மாவுக்கும் சண்டை வரும்.. ஆனால் அந்த கோபமெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல நீடிக்காது. அதுதான் எங்கள் குடும்பத்தின் சந்தோஷ ரகசியம்” என்கிறார் காளிதாஸ்.