தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛‛ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமோ...'' என்று தன்னுடைய பாடலை கேட்க ஒருநாள் போதுமா என்று பாடிய பாலமுரளிகிருஷ்ணாவை, சின்ன கண்ணன் இறைவன் அழைத்து கொண்டான். கர்நாடக சங்கீதத்தில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை, பாடாத சபாக்களே இல்லை எனும் அளவுக்கு, உலகம் முழுக்க தன் சங்கீதத்தால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாலமுரளி கிருஷ்ணா இன்று நம்மோடு இல்லை. அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வரும் வேளையில், பிரபல பின்னணி பாடகர் கேஜே.யேசுதாஸ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யேசுதாஸ்... ‛‛பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு கர்நாடக சங்கீதத்திற்கு பெரிய நஷ்டம், அவர் என்னுடைய குரு போன்றவர். நம்முடைய மனதிலிருந்து அவர் என்றும் நீங்க மாட்டார் என்று தான் சொல்ல வேண்டும்'' என கூறியுள்ளார்.