சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
கர்நாடக சங்கீதத்தின் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று காலமானார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், கர்நாடக சங்கீத கலைஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவக்குமாரும் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். கர்நாடக சங்கீத்தின் பீஷ்மர் பாலமுரளி கிருஷ்ணா என்று சிவக்குமார் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ‛‛பால முரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் அப்படிப்பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள், ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜனின் வேண்டும்கோளை ஏற்று திருவிளையாடல் படத்தில் டிஎஸ். பாலையாவின் குரலுக்கு ‛‛ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா...'' என்ற பாடலை பாடினார். அந்தப்படம் வெற்றி படமாக ஓடியதற்கு, அவர் பாடிய பாடலும் முக்கிய காரணமாக அமைந்தது. ஏன்னென்றால் மாறுபட்ட குரல், டிஎஸ்.பாலைய்யா வின் நடிப்பு போன்றவையாகும். அதன்பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் கவிக்குயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார் ,ராதா வேடத்தில் நடித்தோம். ‛‛சின்ன கண்ணன் அழைகிறான்...'' என்கிற பாடல்காட்சியில் நடித்தோம், பாலமுரளி கிருஷ்ணா பாடினார். அந்த பாடல் தமிழ்சினிமா ராசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காக பாடினார், அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.