தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அந்த மாஜி சாக்லெட் பாய் தனியாக வந்த ஒருத்தனுடன் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்றைய ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்கிறார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை. படப்பிடிப்பு தளத்தில் அவர் காட்டுகிற தெனாவெட்டு. ஆங்கிலம் தெரியாதவர்களிடம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பந்தா, கேரவனுக்குள் யாரையும் அனுமதிக்காத தனிமை, சக நடிகர்களை ஏளனமாக பார்ப்பது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை நிற்க வைத்தே பேசுவது என அவர் பண்ணுகிற அலப்பறைகள் தாங்க முடியலையாம். அவரை வைத்து வேட்டை நடத்தும் மனோபலமிக்க தயாரிப்பாளர் அவரிடம் மாட்டிக் கொண்டு தவியாய் தவிக்கிறாராம். "படம் முடியட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரியை" என்று புலம்பிக் கொண்டு திரியுறாராம் காமெடி தயாரிப்பாளர்.