தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா கர்நாட இசை உலகில் கொடிகட்டி பறந்தார். ஆனாலும் சினிமாவிற்கு அவர் அவ்வப்போது தனது பங்களிப்பை தந்திருக்கிறார். இசை அமைப்பாளராக, பாடகராக அவரது பங்களிப்பு குறைவாக இருந்த போதும் பங்களிப்பு செய்த ஒவ்வொன்றும் காலத்தை கடந்து நிற்கிறது.
அவரை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சித்தார்கள். அவ்வையார், திருநீலகண்டர், திருவிளையாடல் போன்ற பல படங்களின் வாய்ப்பை அவர் மறுத்தார். "வாழ்க்கையிலேயே நடிக்கத் தெரியாது. நான் எப்படி சினிமாவில் நடிப்பேன்" என்ற மறுத்து விடுவார்.
பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பாலமுரளி கிருஷ்ணாவின் மிகப்பெரிய ரசிகர். அவரை எப்படியாவது ஒரு படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று மனதில் முடிவு செய்து வைத்திருந்தார். 1967ம் ஆண்டு அவர் பக்தபிரகலாதா என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்தார். கண்ணனின் ஒரு அவதாரமான நரசிம்ம அவதார கதை. பாலமுரளி கிருஷ்ணாவை சந்தித்து... "நீங்கள் இதில் நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டாம். கேமரா முன்னால் வந்து பாடிவிட்டுப்போனால் போதும்" என்று கூறி சம்மதிக்க வைத்தார். நாரதர் அழமாட்டார், பாடுவார், கொஞ்சம் வசனம் பேசுவார் என்பதால் பாலமுரளி கிருஷ்ணாவும் சம்மதித்தார்.
பக்தபிரகலாதா படத்தை சித்ரப்பு நாராயண ராவ் இயக்கினார், எஸ்வி ரங்காராவ், அஞ்சலி உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் பிரகலாதனாக நடித்த ரோஜாரமணி பிற்காலத்தில் பெரிய ஹீரோயின் ஆனார். படத்தில் மொத்தம் 25 பாடல்கள், அதில் தனது பாடல்களை பாலமுரளி கிருஷ்ணா பாடினார். பி.சுசீலா 14 பாடல்களை பாடினார். சலூரி ராஜேஸ்வரராவ் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படத்திற்கு பிறகும் நிறைய நடிப்பு வாய்ப்புகள் வந்தது. பாலமுரளி கிருஷ்ணா ஏற்கவில்லை. குறிப்பாக சங்கராபரணம் படத்தில் சோமயாராஜூலு வேடத்தில் நடிக்க வைக்க எவ்வளவோ வற்புறுத்தியும் நடிக்க மறுத்து விட்டார். அவர் அவராகவே சில படங்களில் தோன்றி பாடியுள்ளார்.