சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஆதித்யா டிவி சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அசார். தற்போது தலதளபதி என்ற நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்று வருகிறார். கார ணம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் பாணியில் அசாரும் சினிமாவுக்கு வந்து விட்டார். சாரல் என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பவர், அதையடுத்து கடலை போட ஒரு பொண்ணு வேணும், ஏன்டா தலையில எண்ணெய் தேய்க்கல போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏன்டா தலையில எண்ணெய் தேய்க்கல படத்தை ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹைனா தயாரித்து இசையமைத்துள்ளார். பக்கா காமெடி கதையில் இந்த படம் தயாராகியுள்ளது. தலையில் எண்ணெய் தேய்க்காதது ஏன் என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது.
இந்த படம் குறித்து அசார் கூறும்போது, பக்கா காமெடி கதையில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடித்துள்ள எனக்கு சீரியசான வேடமாக இருந்தாலும் ஆடியன்சை சிரிக்க வைக்கும் கதை. எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித் துள்ளார். அவர் என்னை விட சீனியர் நடிகை என்றபோதும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நடித்தார். அதனால் அவருடன் நடித்தது நல்லதொரு அனுபவமாக அமைந்தது.
மேலும், இந்த படத்தின் தலைப்பு குறித்து இணையதளத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம். அப்போது அம்மாதான் மகன் தலையில் எண்ணெய் தேய்க்கவில்லை என்றால், ஏன்டா எண்ணைய் தேய்க்கல என கேட்பார். அதனால் இது அம்மா சென்டிமென்ட் படமாக இருக்கும் என ஆளுக்கு ஒரு கருத்து சொன்னார்கள். சிலர் இப்படியெல்லாம் ஒரு தலைப்பு தேவையா என திட்டவும் செய்தனர். ஆக, ஏதோ ஒரு வகையில் இந்த படத்தின் டைட்டில் ரசிர்களை போய் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறும் அசார், இந்த படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரெஹைனா, படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தைப்பார்த்து விட்டு கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார். அதனால் எனது நடிப்பில் வெளியாகும் இந்த படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்து திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என்கிறார் அசார்.