இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர பிரதமர் எடுத்த நடவடிக்கை ஒரு கசப்பு மருந்து என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என இருவிதமான குரல்கல்களும் எழுந்துள்ளன.. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட திரையுலகத்தினர் கூட பெரும்பாலும் பிரதமரின் நடவடிக்கையை பாராட்டியே வருகின்றனர்.. இப்போது லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். இதுகுறித்து தனது வலைதளத்தில் அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
“பிரதமரின் நடவடிக்கை கருப்பு பணத்தின் மீதான 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் வங்கியிலும், ஏ.டி.எம்மிலும் க்யூவில் நிற்கும் அளவுக்கு சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தான்.. ஆனால் எத்தனை நாளைக்கு..? க்யூவில் நிற்பது பற்றி உனக்கென்ன தெரியும் என சிலர் கேட்கலாம். எனக்கென அத்தியாவசிய தேவை வரும்போது, கேரளாவில், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் நானும் க்யூவில் நின்றுதான் எனக்கானதை பெற்றிருக்கிறேன். இன்று நடந்துகொண்டு இருக்கும் எனது படப்பிடிப்பும் கூட இந்த நடவடிக்கையால் சிரமத்துக்கு உள்ளாகித்தான் இருக்கிறது. அதற்காக நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரும்போது இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருக்கவேண்டுமே தவிர அதை நிந்திக்க கூடாது.. பிரதமரின் இந்த நடவடிக்கையை நான் பெரிதும் வரவேற்கிறேன்” என மோகன்லால் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்