தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளாக நாசர், பொன்வண்ணன், கருணாஸ், விஷால், கார்த்தி ஆகியோர் உள்ளனர். வருகிற நவ., 27-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வரும் அதேநேரத்தில் பொதுக்குழு நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், தடைவிதிக்க கோரி வழக்குகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பொன்வண்ணன், கார்த்தி தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று(நவ., 22-ம் தேதி) சென்னை கமிஷனர் ஜார்ஜை திடீரென சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், ‛‛நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனுமதி கேட்டிருந்தோம். மேலும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக எந்த பிரச்னையும் இன்றி நடைபெற கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் என்றார்.