'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
முன்னணி தயாரிப்பாளரது மகனாக இருந்தாலும் 'ராம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ' ஆகிய படங்கள் மூலம் தன்னை நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர் ஜீவா. 'கோ' படத்திற்குப் பிறகு தனி நாயகனாக தனி வெற்றியைப் பெறுவதற்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'கோ' படத்திற்குப் பிறகு அவர் தனி நாயகனாக நடித்து வெளிவந்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. 'கோ' படம் வெளிவந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இடையில் விஜய்யுடன் 'நண்பன்', விக்ரமுடன் 'டேவிட்', சந்தானம், வினய்யுடன் இணைந்து 'என்றென்றும் புன்னகை' என கூட்டணி மூலம் தன் இருப்பைக் கொஞ்சமாகவாவது தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஜீவா நடித்து 2014ல் வெளிவந்த 'யான்' இந்த வருடம் வெளிவந்த 'போக்கிரி ராஜா' ஆகிய படங்கள் அவருக்கு படுதோல்விப் படங்களாக அமைந்தன. இனி, 'கவலை வேண்டாம்' என நினைத்திருந்தவருக்கும் இந்தக் 'கவலை வேண்டாம்' படத்தின் வெளியீடு அடிக்கடி தள்ளிப் போய்க் கொண்டேயிருந்து. ஒருவழியாக நாளை மறுநாள் 'கவலை வேண்டாம்' திரைக்கு வருகிறது.
இனியாவது, ஜீவா 'கவலை' இல்லாமல் இருப்பாரா...அல்லது 'கவலை' மேலும் அதிகரிக்குமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.