வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வரும் நேரத்தில் பொதுக்குழு நடத்த தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த எம்.ராஜேந்திரன் என்பவர் சென்னை 11வது உதவி சிட்டி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து வருகிறேன். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். சங்கத்தின் பொதுக்குழு வருகிற 27ந் தேதி நடக்க இருப்பதாக கடிதம் வந்துள்ளது. அந்த கடிதம் 2ந் தேதி எழுதப்பட்டுள்ளது. அது கூரியர் மூலம் அனுப்பப்பட்டு உறுப்பினர்களுக்கு 9ந் தேதிதான் கிடைத்துள்ளது. சங்க விதியின் படி பொதுக்குழு பற்றி தகவல் உறுப்பினர்களுக்கு 21 நாட்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வளவு கால அவகாசம் தரப்படவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆண்டுக்கு ஒரு பொதுக்குழுதான் கூட்டப்படவேண்டும். தற்போது இரண்டாவது பொதுக்குழுவை கூட்டுவது தவறானது. பொதுக்குழு நடைபெற இருப்பதாக கூறப்படும் அரங்கம் ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. ஆனால் சங்க உறுப்பினர்கள் 3 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். எனவே இதுவும் தவறானது. எனவே 27ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து வருகிற 25ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.