டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மும்பையில் நடந்த 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் ரஜினியை வாழ்த்து கோஷம் எழுப்பியபடி வரவேற்றனர். பின்னர் ரஜினி அவர்களிடையே பேசும்போது... "2.ஓ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை சென்றிருந்தேன். விழா சிறப்பாக நடந்தது நீங்களும் பார்த்திருப்பீங்க. விமான நிலையம் வரை வந்து என்னை வரவேற்றதற்கு நன்றி" என்று கூறிவிட்டு வேகமாக சென்றார்.
அவரை துரத்திய நிருபர்கள். 2.ஓ படம் எப்போது வெளிவரும்?, இடைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?, 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைபற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழக முதல்வரை மீண்டும் சந்திக்க செல்வீர்களா? கருணாநிதியும் உடல் நலமில்லாமல் இருக்கிறாரே அவரையும் சந்திப்பீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்கள். "2.ஓ போஸ்டர் பார்த்தீங்களா நல்லா இருந்திச்சா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.