தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் அனேகன் படத்தில் அறிமுகமானவர் அமைரா. அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்காமல் இந்திக்கு சென்று விட்டார். அங்கு மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்தவருக்கு அடுத்து குங்பூ யோகா என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் மூலம் வருகிறார். இதில் அவர் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
அனேகன் படத்திற்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லைதான். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் இந்தி வாய்ப்பு கிடைத்ததால் அதை மிஸ் பண்ண வேண்டாம் என்ற இந்திக்குச் சென்றேன். அதன் பிறகு கடவுள் புண்ணியத்தில் ஜாக்சிசானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற படங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த படத்திற்கு என்னை ஒப்படைத்தேன். ஆறுமாதம் சண்டை பயற்சி 6 மாதம் பல நாடுகளில் படப்பிடிப்பு என ஒரு வருடம் ஓடிவிட்டது. ஜாக்கிசானுடன் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம்.
குங்பூ யோகா படத்திற்கு பிறகு நான் ஹாலிவுட் நடிகை ஆவேனா என்று கேட்கிறார்கள். அது கடவுளின் கையில் இருக்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும். ஹாலிவுட் படத்திற்காக ஒரு வருடம் ஒதுக்கியதால் தமிழ் படத்தில் இடைவெளி விழுந்து விட்டது. எனது தோழி விசாகா சிங் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை எனக்கு காண்பித்தார். அதில் சந்தானத்தின் நடிப்பை பார்த்து விட்டு ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து தமிழில் நடிக்க நல்ல கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்கிறார் அமைரா.