'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரமமான முறையில் மரணத்தை தழுவி சுமார் 9 மாதங்களாகிவிட்டது.. அவர் மரணம்சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளது என மருத்துவ அறிக்கையில் உருதிப்படுத்தப்பட்டும் கூட, அதற்கு காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ்.. கலாபவன் மணியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், அவரது கெஸ்ட் ஹவுஸுக்கு வந்துசெல்பவர்கள் அனைவரையும் விசாரித்தும் எந்த பலனும் இல்லை..
கலாபவன் மணி மரணத்தின்போது சந்தேகப்பட்டியலில் நடிகை அஞ்சு அரவிந்தும் இருந்ததாக சொல்லப்படுகிறது... இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்கள் என்பதும் கலாபவன் மணியின் 'பாடி' ஹவுஸுக்கு வந்து அவ்வப்போது மணியை அஞ்சு அரவிந்த் சந்தித்து உரையாடுவார் என்றும் சொல்லப்பட்டது.. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்த அஞ்சு அரவிந்த், தானும் கலாபவன் மணியும் ஆத்மார்த்த நண்பர்கள் என்றும், அவரது கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக அவரை சந்திப்பது வழக்கம் என்று கூறியவர், கலாபவன் மணி மரணமடைந்த தினத்தன்று தான் கலாபவன் மணியை சந்திக்க செல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.