தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து வந்த மதன், கடந்த மே 29ம் தேதி திடீரென மாயமானார், சுமார் 6 மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர், திருப்பூரில் தனிப்படை போலீசார் அவரை இன்று(நவ., 21-ம் தேதி) கைது செய்தனர்.
மாயம் : வேந்தர் மூவிஸ் சார்பில் ஏராளமான படங்களை தயாரித்தும், விநியோகித்தும் சினிமாவில் பரபரப்பாக செயல்பட்டு வந்தார் மதன். இவர் பிரபல கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம்., கல்லூரி குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 29-ம் தேதி, மதன், ‛‛நான் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதியாகிறேன்'' என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
ஆட்கொணர்வு மனு : இதையடுத்து கண்டுபிடித்து தரக்கோரி அவரது இரண்டு மனைவிகளும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். மேலும் மதனின் தாயார், அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
ரூ.70 கோடி மோசடி : இதுஒருபுறம் இருக்க மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி மதன் பலரிடம் பணம் வாங்கி ரூ.70 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக, கிட்டத்தட்ட அவர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பச்சமுத்து கைது : மேலும் மதன் மாயமான வழக்கு தொடர்பாக எஸ்ஆர்எம்., குழுமத்தின் தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கோர்ட் கண்டிப்பு : மதன் மாயமாகி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டது. அவரை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். ஆனால் அவர் பிடிபடாமலே இருந்து வந்தார். இதனால் ஒருக்கட்டத்தில் கோர்ட், போலீஸ்க்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
திருப்பூரில் கைது : இந்நிலையில் தொடர்ந்து மதனை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், அவரது நண்பர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலும் வடமாநிலங்களில் தொடர்ந்து தேடி வந்தனர். அதன்படி, இன்று(நவ., 21-ம் தேதி) மணிப்பூர் மாநிலத்தில் தனிப்படை போலீசார் மதனை கைது செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், சென்னை ஆணையர் ஜார்ஜ், திருப்பூரில் வைத்து மதன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இன்று மாலை மதனை சென்னை, ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.