அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மேரி கோம், சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக சஞ்சய் தத்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்திற்கு ‛பூமி' என்று பெயரிட்டுள்ளனர். இதை பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள்.
இப்படம் பற்றிய சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு அழுத்தமான, என்னை பாதிக்கக்கூடிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த கதையை படித்தபோது மிகவும் பிடித்திருந்தது, அந்த உணர்வு ஏற்பட்டது. பூமி படம் ஒரு உணர்வுப்பூர்வமான கதை. அப்பா - மகள் இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அருமையான கதை என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் பூஷண் குமார் கூறுகையில், ‛‛சஞ்சய் தத் ஒரு பல்துறை வித்தக கலைஞர், இந்த பூமி கதை அவருக்கு சிறப்பாக இருக்கும். இந்தப்படத்தை காண மிகவும் ஆர்வமாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
‛பூமி' படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்., மாதம் துவங்க உள்ளது.