'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் ‛2.O'. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக பிரமாண்டமாய், சுமார் ரூ.350 கோடி செலவில் உரவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில், நேற்று நடந்தது. இதில் ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், ஷங்கர், ஏஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, மதன்கார்கி, ரசூல் பூக்குட்டி, விஎப்எக்ஸ் ஸ்ரீனிவாச மோகன், ஆர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் அழையா விருந்தாளியாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானும் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சல்மான், ‛‛இந்த விழாவிற்கு யாரும் என்னை அழைக்கவில்லை. ரஜினியை சந்திக்க வேண்டும் என்பற்தகாகவே யாரும் அழைக்காமல் வந்தேன். பர்ஸ்ட் லுக் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது, படம் பிரமாண்டமாய் இருக்கும் என நம்புகிறேன்'' என்று கூறியவர் நிகழ்ச்சியில் சல்மான் பேசும்போது ரஜினியை குரு குரு என்றே அழைத்தார்.