விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
குத்து ரம்யாவிற்கு பிறகு கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான நடிகைகளில் சஞ்சிதா ஷெட்டியும் ஒருவர். ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த இவர், பின்னர் கொள்ளைக்காரன், சூது கவ் வும், பீட்சா-2 படங்களில் நடித்தார். தற்போது என்னோடு விளையாடு, எங்கிட்ட மோதாதே, ரம், தேவதாஸ் பிரதர்ஸ். ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. அதோடு, தன்னுடன் நடிக்கும் மற்ற கதாநாயகிகளிடமும் எந்தவித ஈகோவும் இல்லாமல் நட்பாக பழகி வருகிறாராம்.
மேலும், எத்தனை பெரிய டேக் என்றாலும் அதை பயிற்சி எடுத்து சிங்கிள் டேக்கில் ஓகே செய்து டைரக்டர்களை அசத்தும் சஞ்சிதா ஷெட்டி, உடன் நடிப்பவர்களிடம், நமக்கெல்லாம் திறமை மட்டுமின்றி உடம்பும், அழகும் ரொம்ப முக்கியம். அது இருக்கிற வரைக்குத்தான் இந்த பீல்டில் கோலேச்ச முடியும் என்று அட்வைஸ் செய்பவர், யாராவது ஸ்பாட்டில் வெயிலில் நின்றால்கூட நிழ லில் வந்து நில்லுங்கள் என்கிறாராம். நேரத்துக்கு சாப்பிடாமல் இருந்தால் சரியான நேரத்துக்கு சாப்பிடுங்கள் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறாராம். இதனால் சக நடிகர்- நடிகைகள் மத்தியில் சஞ்சிதா ஷெட்டியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.