கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பேராண்மை படத்தில் அறிமுகமாகி பாலாவின் பரதேசி படத்திற்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் பின்னர் ரஜினி நடித்த கபாலி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார். தற்போது நான்கு படங்களில் அவர் நாயகியாக நடித்து வருகிறார். சில முன் னணி ஹீரோக்களுடன் நடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் தன்ஷிகா.
மேலும், நடிக்க வந்து பல ஆண்டுகளில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை சினிமா வட்டார நண்பர்களை அழைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார் சாய் தன்ஷிகா. இந்நிலையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 20-ந்தேதி அன்றுஅவருக்கு வாழ்த்து சொல்லி அவரது கடலூர் ரசிகர் மன்றத்தினர் சென்னையின் பிரதான சாலைகளில் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கும் மேலாக, ரஜினி ரசிகர் மன்றத்தினரும் சாய் தன்ஷிகாவுக்கு சென்னை சாலி கிராமம் பகுதிகளில் பெரிய அளவில் போஸ்டர் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்ஷிகாவுக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்திருப்பதை கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.