மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இருமுகன் படத்தை அடுத்து வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி விட்டது. ஏற்கனவே கரிகாலன் படத்திற்காக கொடுத்திருந்த கால்சீட்டில் இந்த படத்தில் நடிக்கிறார் விக்ரம். டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், விக்ரமுடன் சூரி, யோகிபாபு, சமுத்திரகனி, சம்பத் உள்பட பலர் கமிட்டாகி விட்டனர். அதையடுத்து ஒரு தெலுங்கு வில்லன் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
மேலும், நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசினார்கள். அவர் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருவதால் கால்சீட் கிடைக்கவில்லையாம். அதையடுத்து பிரேமம் சாய் பல்லவியை விக்ரமின் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அதோடு, இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறதாம். இதற்கு முன்பு விக்ரம் எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தபோதும் இந்த கதை விக்ரமை இன்னொரு மாறு பட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் என்கிறார்கள். ஆக, வடசென்னைவாசியாக தன்னை முழுமையாக மாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறார் விக்ரம்