ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மு.கருணாநிதி எழுதிய 24 சிறுகதைகள் படமாக்கப்பட்டு கலைஞரின் கதை நேரம் என்ற பெயரில் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தான் எழுதிய சிறுகதைகளுக்கு கருணாநிதியே கதை வசனம் எழுத, எஸ்.ராஜகுமாரன் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இந்த தொடர் பற்றி இயக்குனர் எஸ்.ராஜகுமாரன் கூறுகையில்,பத்திரிகைகளில் மேகவீடு உள்பட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். மேலும், இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள் -என்ற பெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். நதியோடிய காலம், குழந்தைகளிடம் நனையும் மழை உள்பட பல கவிதை தொகுப்புகளையும் எழுதியிருக்கிறேன். இந்நிலையில், கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சிறு கதைகளில் 24 கதைகளை எடுத்து அதை குறும்பட வடிவில் இயக்குகிறேன். அரை மணி நேரம் கொண்ட இந்த தொடர் வாரம் ஒன்று ஒளிபரப்பாகிறது. இதற்கு கலைஞரின் கதை நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கருணாநிதி எழுதிய, எழுத்தாளர் ஏகலைவன், குப்பைத் தொட்டி,அனில் குஞ்சு, சங்கிலி சாமியார் என நான்கு கதைகள் படமாக்கப்பட்டு விட் டன. இவை அனைத்தையும் மு.கருணாநிதியின் ஆலோசனையில் இயக்கியுள்ளேன். ப்ரோமா வரை கொடுத்து விட்டோம். இந்த தொடர் ஒரு ஆர்ட் பிலிம் மாதிரி இருக்கும். படமாக்கப்பட்டுள்ள இந்த நான்கு எபிசோடுகளை கலைஞரும் பார்த்து ஓகே பண்ணி விட்டார். விரைவில் ஒளிபரப்பாகிறது.
இதற்கு முன்பு பாலுமகேந்திரா, கதை நேரம் என்றொரு தொடரை இயக்கியிருந்தார். அதில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கதாசிரியர்களின் கதை இடம்பெற்றது. ஆனால் இந்த கலைஞரின் கதை நேரம் தொடரில் அனைத்துமே கலைஞர் எழுதிய சிறுகதைகளே இடம்பெறுகிறது என்பது தனிச்சிறப்பு. மேலும்,
இதில் சினிமா, சீரியல்களில் நடித்த நடிகர் -நடிகைகள் யாரும் நடிக்கவில்லை. சிறு கதையின் கதாபாத்திரங்கள் மைண்டில் வருவது போன்று அனைவருமே புதுமுகங்களாக நடித்துள்ளனர். இலக்கியவாதிகள் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இந்த சிறுகதைகளை கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறேன் என்று கூறும் இயக்குனர் எஸ்.ராஜகுமாரன், ஜனவரியில் சமூக நோக்கமுள்ள ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் சொல்கிறார்.